செவ்வாய், செப்டம்பர் 21, 2010

மதங்களை கடந்த ஆன்மிகம்! (பாகம் 1)

செப்டெம்பர் 17, 18, 19 தேதிகளில் சபரி மலைக்கு என்னுடைய project team யுடன் செல்லும் வாய்ப்பு கிடைத்தது... மிகவும் சிறந்த அனுபவமாக இருந்தது... அதைப் பற்றிய பதிவு...

தயாரிப்பு
சபரிமலை நோக்கிய பயணம்
சபரிமலையில் நிகழ்வுகள்
ஊர்க்கு திரும்புகையில்

தயாரிப்பு
கிறிஸ்துவனாகிய நான், சபரிமலைக்கு செல்ல தூண்டியது இரண்டு விடயங்கள்... முதலாவது பல இந்து நண்பர்கள் மிக ஆர்வமாக சபரிமலை செல்ல தூண்டப்படுவத்தின் ஈர்ப்பு என்ன என்ற ஆர்வம் (என்னுடைய மேனேஜர் மிக மிக ஆர்வம் உடையவர், மாதந்தோரம் முதல் ஐந்து நாள்கள் நடை திறக்கையில் இரண்டு நாள்கள் தவறாமல் சில ஆண்டுகளாக சென்று வருகிறார். அதைப்பற்றி அவர் பேசாத நாட்கள் கிடையாது எனலாம்), இரண்டாவது அதற்காக அவர்களை அவர்கள் தயாரிக்கும் விதம்... (நாற்பது நாட்கள் விரதம், மாலை அணிவார்கள், சுய சுத்தம், காலை மாலை பச்சை தண்ணீர் குளியல், தினமும் ஆலயத்தில் பூஜை, இது போக கெட்டப்பழக்கங்கள் இருந்தால் விட்டு விட வேண்டும், தீய வார்த்தைகள் பேசக்கூடாது, தீய எண்ணங்களை கைவிட வேண்டும், பிற பக்தர்களையும் மனிதர்களையும் சாமி என்றழைத்து யாவருடனும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்... பலருக்கு இவற்றையெல்லாம் கடைப்பிடிப்பது மிக கடின விடயம்... அதிலும் குறிப்பாக கார்த்திகை, மார்கழி மாதங்களில் இதை கடை பிடிப்பது மிக மிக கடினம், அந்த இரு மாதங்கள் தான் சபரிமலை season என அழைக்கப்படுகிறது)

இந்த பயணத்திற்காக நாங்கள் எங்களை மிகவும் தயாரிக்கவில்லை. ஒரு வாரம் மட்டுமே தயாரிப்பு. குறிப்பாக நான் மாலை கூட அணியவில்லை. என்னுடைய ஆர்வத்தினால் கட்டுப்பாடுகளை சிறிது தளர்த்தி அவர்களுடன் இந்த தெய்வீக பயணத்தில் இணைத்து கொண்டார்கள்...

சபரிமலை நோக்கிய பயணம்
செப்டம்பர் 17 வெள்ளிக் கிழமை, மதியம் 2.30 மணிக்கு பயணம் மதுரையில் இருந்து சபரிமலை நோக்கி ஆரம்பமானது... மொத்தம் 7 சாமிகள், 2 வாகனம்... மதிய உணவும் இரவு உணவும் இரு நண்பர்கள், வீட்டில் தயார் செய்து கொண்டுவந்திருந்தார்கள்...

உசிலம்பட்டி முன்பு இரயில்வே கேட் அருகே மரததடியில் மதிய உணவு சாப்பிட்டோம். உணவினை அங்குள்ள ஏழை மக்களிடம் பகிர்ந்துகொண்டோம். எலுமிச்சை சாதம், சட்னி, தயிர் சாதம்... சாப்பாடு மிகவும் அருமையாக தயார் செய்து இருந்தார்கள்.

அருமையான மலைவழி பயணம், அதுவும் வண்டி ஒட்டாமல் பின்னிருக்கையில் உட்கார்ந்து இயற்கையை ரசித்தும் வெட்டி கதைகளையிட்டும் செல்வது எப்படி இருந்தது என்றால்... சொர்க்கத்திற்கு செல்கையில் கடவுள் இடம் அதைப்பற்றி வினவுவது போல்... இனிமையான பொழுதுகள்... மிகவும் மகிழ்ச்சியோடு பயணித்தேன்...

பிற்பாதி பயணத்தில் சில புதிய விடயங்களை பத்தி விவாதிக்க முனைந்தது. மனிதனுடைய ஆத்மா (soul) பற்றிய ஒரு உரையாடல் அது... Dr. Newton என்பவர் 'past life regression' பற்றிய ஆராய்ச்சியில் இறப்பிற்குப்பின் நிகழும் விடயங்களை, அதாவது உடலில் இருந்து ஆத்மா எப்படி பயணிக்கிறது, ஆத்மாக்களின் வகைகள் என்ன, மறுபிறவி என பல ஆயிரம் மக்களிடம் மனோதத்துவ ரீதியில் ஆராய்ச்சி செய்திருக்கிறார். அதைப்பற்றி நுணுக்கமாக விவாதித்தோம். (மேலும் விடயம் அறிய இந்த வலைக்கு செல்லவும் http://www.near-death.com/newton.html. ) ஒவ்வொரு மதத்திலும் ஆத்மா பற்றி எப்படி நோக்குகிறார்கள், சொர்கத்திற்கும் நரகத்திற்கும் ஆத்மாவின் தொடர்பு என்ன, குழந்தைகளுக்கு வரும் கனவுகள் என நீண்டது இந்த உரையாடல்...

சரியாக 9.30 மணிக்கு சபரிமலை அடிவாரம் பம்பை நதியை அடைந்தோம்... அங்கு நண்பர் கிருஷ்ணன் காத்துக்கொண்டு இருந்தார். மின் அலுவலகத்தில் வாகனங்களை நிறுத்தி விட்டு இரவு உணவை முடித்தோம்... சப்பாத்தியும் தக்காளி தொக்கும், என்ன ருசி...

இரவு மணி 10.30, பம்பையில் நீராடிவிட்டு மலையில் நடக்க ஆரம்பித்தோம்... மலையிலுள்ள கோவிலுக்கு மொத்தம் 7 கிமீ. முற்றிலும் மலைப்பாதை. ஆரம்பத்தில் ஏதோ எளிதாக இருப்பது போல் தோன்றியது. பின்னர் செங்குத்தாக ஏற வேண்டி இருந்தது. நான் சிறிது தூரத்திலேயே மிகவும் களைப்பு ஆனேன். நண்பர்கள் தைரியம் குடுத்தார்கள், சுமையை பகிர்ந்து கொண்டார்கள். சிறுது எளிதானது பயணம்... அதன் பிறகு கொஞ்சம் கதை பேசிக்கொண்டு நடையை கட்டினோம்... ஒரு இடத்தில் Lime Soda கிடைத்தது... உடலுக்கு கொஞ்சம் புத்துணர்ச்சி கிடைத்த மகிழ்ச்சி...

மலையை அடைந்தோம்... சந்தோசமாக இருந்தது மனதிற்கு... போனதும் தயார் நிலையில் இருந்த அறையில் 7 பேரும் ஓய்வெடுத்தோம்...

சபரிமலையில் நிகழ்வுகள்
காலையிலேயே எழுந்து குளித்து சாமி பார்க்க தயாரானோம்... அச்டாபிஷேகம், சிறப்பு தரிசனம், சாப்பாடு, ஓய்வு, சாப்பாடு, கதைகள், அரட்டைகள், விளையாட்டு செய்திகள், சச்சின் டெண்டுல்கர், கடவுளர் கதைகள், மதங்கள், ஆன்மிகம் என சிலபல உரையாடல்... பொழுது இனிதே கழிந்து கொண்டிருந்தது...

மேலும் விரிவாக தொடர்வேன்...

படங்கள் இந்த வலை இணைப்பில் உள்ளது... பயனடையுங்கள் நண்பர்களே :). http://picasaweb.google.co.in/snabakvinod/SabarimalaSep17To19?authkey=Gv1sRgCKres9fCo8iEDw#

படித்த நண்பர்கள் comment கொடுக்கலாமே...

வியாழன், செப்டம்பர் 09, 2010

இன்று புதிதாய் பிறந்தேன்

இவ்வுலகில் இன்றையச் சூழலில் நிறம் மாறும் மனிதர்களிடையில் வாழ்வது மிக கடினம்... அதனினும் கடினம் அப்படிப் பட்ட மனிதர்களிடமிருந்து சூழ்ச்சி எனும் அவர்கள் முடிச்சை அவிழ்த்து வெளியில் வருவது...

மிகவும் பிடித்த நண்பர்களிடமே ரொம்ப நேரம் இருப்பது சிலருக்கு சலிப்பு தட்டும் இந்த அதிவேக உலகில், புதிதாய் கிடைத்த நண்பனை(?) ஏற்று நடப்பது சிறிது சிரமமே... அந்த சிரமத்தையும் மீறி நட்புணர, "விட்டு கொடுக்கும் மனநிலை" மிகவும் அவசியம் இருவருக்கும்... அதில் ஒருவர் பின்தங்கினாலும் படகு சுமுகமாக பயணிக்காது... சரி, விட்டு கொடுப்பினும் பிரியலாம் என்ற எண்ணம் ஒருவருக்கு வந்தாலும் ஒருவருக்கொருவர் எதிரியாய் பாராமல் பிரிவது சிறப்பு... சிறிய மனப்போராட்டம் இருந்தாலும் காலப்போக்கில் சரியாகும்... இப்படி ஒரு நண்பனிடம்(?) இருந்து கடந்த வாரம் பிரியும் சூழ்நிலை... மனசுக்கு கடினமாக இருந்தாலும் ஒரு சுமை குறையும் என்ற நம்பிக்கை இருந்தது...

மனசுக்குள் உள்ள வலி, வேலையையும் உடலையும் பாதிக்கிறது... ஒரு பெரியனாட்டமில்லாமல் ஒரு வாரமாக அலுவலகப் பணி சென்றுக்கொண்டுருக்கையில் சரி உடல் பிரச்சனையாவது சரி பண்ண மருத்துவரை அணுகி நலமடைய வழி செய்வோம் என்ற கருத்து மனதில் வருகிறது...

நேற்று மருத்துவரை அணுகுகையில், நடந்த உரையாடல் கீழே...

"அய்யா ஒரே தலைவலியாக இருக்கிறது, உடல் வலிக்கிறது, எப்போதும் tired ஆகவும் காய்ச்சல் வரும் என்பது போன்ற உணர்வும் இருக்கிறது"

மருத்துவர்: உங்க வயது என்ன தம்பி?

"28"

மருத்துவர்: அப்படின்னா சர்க்கரை நோய் வர வாய்ப்பில்லை... உங்க எடை எவ்வளவு...

"74"

மருத்துவர்: பிரச்சனை இங்கதான் இருக்கு... தம்பி நல்லா உடற்பயற்சி செய்யுங்க... இப்பவே எடைய குறைக்கிலைனா பின்னாடி சக்கரை நோய், BP, Heart Attack எல்லாம் வரும்... எப்படியாச்சும் எடைய அறுபத்தஞ்சா ஆக்கிருங்க... எல்லா பிரச்சனையும் பறந்து போயிரும்... நீங்க தன்னாலே உற்சாகமா ஆயிருவீங்க...

"உடற்பயற்சி தினமும் செய்யிறேன் (சும்மா அடுச்சு விட வேண்டியதுதான, வந்து பாக்கவா போறாரு :)). எவ்வளவுதான் செய்தாலும் எடை குறைய மாட்டேங்குது... இல்லையா, உடம்பு சரியில்லாத மாதிரியே தோணுது, ஏதாவது மருந்து குடுங்க"

மருத்துவர்: அப்படி இல்லப்பா, நீ உடற்பயிற்சி செய்தால் மட்டும் போதாது... சாப்பாட்ட குறைக்கணும்... தம்பி, உங்கள பாத்தாலே காலையிலே 10 இட்லி, 8 பூரி சாப்பிடுபவர் மாதிரி தெரியுது (இவருக்கு எப்படி தெரிஞ்சுது? சரியா சொல்றாரு)... காலையில 3 இட்லியா சாப்பாட்ட குறைச்சிருங்க... எல்லாம் சரியாயிடும்...

"இல்ல இல்ல நான் கம்மியாதான் சாப்பிடுறேன்... எப்போதும் diet தான்(கீழ விழுந்தாலும் மீசையில மண் ஓட்டக்கூடாதே :))"

மருத்துவர்: தம்பி, எல்லோருக்கும் இந்த தலைமுறை இளைங்கருக்கு இப்போ இந்தமாதிரி பிரச்சனை நிறைய இருக்கு... வயசுக்கு அதிகமான மனசுமையே இதுக்கு காரணம்... இதுக்கு மருந்தெல்லாம் கிடையாது... ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்காதிங்க... மன நிம்மதியான, உடல் நலத்தோடு ஆரோக்கியமான, மகிழ்ச்சியான நிலையில் எப்போதும் இருக்க ஒரே வழிதான்... பற்றட்ட வாழ்க்கை வாழனும்ப்பா.... (மருத்துவர் கிட்ட இருந்த இத யாரும் எதிர்பாத்திருக்க மாட்டங்க) (இப்போ முதல் பத்தி படிங்க).

"????*&*)(^%^!!!"

வியாழன், ஆகஸ்ட் 19, 2010

ஒரு பெரும் பொருளாதார விடுதலைக்கான போராட்டம்

சுவிஸ் வங்கி… 90 இலட்சம் கோடி… மலைக்க வைக்கும் கள்ளப் பணம்!



உலகின் கள்ளப் பணத்தைப் பதுக்கி வைக்கும் சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் மட்டுமே ரூ 70 லட்சம் கோடி, அதாவது 1.40 ட்ரில்லியன் டாலர் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது நினைவிருக்கலாம். இதுகுறித்து டிஎன்ஏ நாளிதழ் ஒரு கட்டுரையைக் கூட வெளியிட்டிருந்தது. அது வெளியாகி சில மாதங்கள் உருண்டோடிவிட்டன. இன்றைக்கு அந்தப் பணத்தின் அளவு ரூ 90 லட்சம் கோடிக்கு மேல் என்கிறார்கள். விரைவில் செஞ்சுரி அடித்துவிடும்!

இந்தப் பணத்தைத்தான் இந்தியாவுக்குக் கொண்டு வருவோம் என்று முன்பு பிஜேபிக்காரர்களும், காங்கிரஸாரும் முழங்கினார்கள். கட்டாயம் கொண்டு வர முடியாது என்று ஒருவரையொருவர் பலமாக நம்பியதாலேயே இந்த முழக்கம்!

இவ்வளவு பணத்தை சும்மா வைத்துக் கொண்டு, மாதச் சம்பளக்காரர்களையும் நடுத்தர வருமானம் கொண்டவர்களுக்கும் வரிமான வரி வரம்பை ரூ 2 லட்சம் வரை ஏற்றுவதற்கே வருடக்கணக்கில் யோசித்துக் கொண்டிருக்கிறது இந்திய அரசு… என்ன தேசமோ!

இருக்கட்டும்…

70 லட்சம் கோடின்னா… எவ்வளவு? அதை வைத்து என்னென்ன செய்ய முடியும் என்றெல்லாம் ஜஸ்ட் ஒரு கணக்குப் போட்டுப்பார்த்தால்… பிரமிப்பில் தலை கிர்ரடித்துவிடும்.

இதோ… அந்த விவரமும்…

1. உலகில் உள்ள 180 நாடுகளில் நமது நாட்டினரின் பணம்தான் சுவிஸ் வங்கியில் உள்ள மிக உச்ச அளவு தொகையாகும். கருப்புப் பணத்தின் பிறப்பிடமாக இந்தியா உள்ளது. சற்றே எண்ணிப் பாருங்கள்… சுவிஸ் வங்கியில் உள்ள 70 லட்சம் கோடி ரூபாய் இந்தியர்களுக்கு சொந்தமானது என்றால் நமது இந்திய நாடு எவ்வளவு பெரிய பணக்கார நாடாகும்.

2. தங்கள் வங்கிகளில் உள்ள 70 லட்சம் கோடி ரூபாய்க்கு சொந்தமானவர்களின் பெயர்களை வெளியிடக் கோரி இந்திய அரசாங்கம் கேட்டால் அப் பெயர்களை வெளியிட சித்தமாக இருப்பதாக சுவிஸ் அரசாங்கம் இந்திய அரசாங்கத்திற்கு அதிகாரபூர்வ கடிதம் எழுதியுள்ளது.

3. சுவிஸ் அரசு நமது இந்திய அரசுக்கு எழுதிய அதிகாரபூர்வ கடிதத்தின் அடிப்படையில் இச்செய்தி ஏற்கனவே கடந்த 22-5-2008-இல் டைம்ஸ் ஆப் இந்தியா உள்ளிட்ட நாளிதழ்களில் வெளியாகி உள்ளது.

4. ஆனால் இதற்கு நமது இந்திய அரசு எந்த பதிலையும் அனுப்பவில்லை. அதாவது 1947 முதல் 2008 வரை சுவிஸ் வங்கியில் வைப்பீடு செய்யப்பட்டுள்ள பணத்தின் விவரங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்கும்படி இந்திய அரசானது சுவிஸ் அரசுக்கு பதில் கடிதம் எழுதவே இல்லை. மேலும் இது குறித்து எதிர்க்கட்சியினரும் அப்போது எந்த ஆர்வமும் கட்டவில்லை.

காரணம், சுவிஸ் வங்கியில் உள்ள பணத்தில் ஒரு பெரிய சதவிதம் நமது இந்திய அரசியல்வாதிகளுக்கு சொந்தமானது. அப்பணம் நமது இந்தியர்கள் ஒவ்வொவருக்கும் சொந்தமானது என்றுதான் சொல்வதுதான் பொருத்தமானதாகும். தேர்தலின்போது மட்டும் கூப்பாடு போட்டார்கள்.

5. இந்தப் பணம் நமது நாட்டுக்குச் சொந்தமானது. இவ்வளவு பெரிய தொகையில் என்னென்ன செய்யலாம் தெரியுமா? இந்தியா தனது அயல்நாட்டுக் கடனை 13 தடவை திருப்பிச் செலுத்தலாம். இத்தொகையில் இருந்து வரும் வட்டியை கொண்டு நமது மைய அரசின் ஓராண்டு பட்ஜெட் செலவை பற்றாக்குறை இல்லாமலேயே சமாளிக்கலாம். மக்கள் எந்த வரியையும் அரசுக்கு செலுத்த வேண்டியிருக்காது. மேலும் 45 கோடி ஏழை குடும்பங்கள் ஒவொன்றுக்கும் தலா 1 இலட்சம் ரூபாய் வழங்கலாம்.

6. சுவிஸ் வங்கியில் மட்டும் 70 இலட்சம் கோடி ரூபாய் வைப்பீடு செய்யப்பட்டுள்ளது என்று கணக்கெடுத்துக் கொண்டால், மற்ற வங்கிகளில் எவ்வளவு பணம் வைப்பீடு செய்யப்பட்டிருக்கும் ? சற்றே கற்பனை செய்து பாருங்கள். இந்தியர்கள் தங்கள் பணத்தை எவ்வளவு இழந்துள்ளார்கள்? நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது! இங்கு இன்னொரு இடர்பாடு உள்ளதும் கவனிக்கத்தக்கது. அதாவது சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் ஒருவர் இறந்து விட்டால், அவரது கணக்கில் உள்ள பணத்திற்கு சுவிஸ் வங்கியே உரிமையாளராகிவிடும்.

7. சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்திய பண முதலைகள் ‘கர்ம வினை’ என்ற சித்தாந்தை சுத்தமாக மறந்து விட்டார்களா? ஊழல், சுரண்டுதல் ஆகிய முறையற்ற வழிகளில் கிடைத்த அப்பணத்தை அவர்கள் தங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்ள நினைத்தாலோ/பயன்படுத்த முனைந்தாலோ அப்பணம் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எத்தகு கேடுகளை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் சிந்திக்க மறந்து விட்டார்கள்.

8. இந்த உண்மை அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் தங்கள் பங்குக்காக காத்திருக்கிறார்கள்.

அன்றாடங்காய்ச்சிகள் இதையெல்லாம் படித்துவிட்டு ஒரு பெருமூச்சுடன் அன்றைய நாள் கழிந்தால் போதும் என ஓடிக் கொண்டே இருக்கிறார்கள்.

எனினும் இதுவும் ஒரு விடுதலை போராட்டமே”. ஒரு பெரும் பொரளாதார விடுதலைக்கான போராட்டம். யார் எப்படி முன்னெடுக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

9. சுவிஸ் வங்கியில் உள்ள மேற்படி பணம் இந்திய மக்களின் ரத்தத்திலும், வியர்வையிலும் விளைந்தது. அது மீண்டும் இந்திய நாட்டிற்க்கு கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோஷத்துக்கு இன்னும் கூட வலு சேரவில்லை என்பதுதான் இதில் மகா சோகம்.

10. இந்திய ஆட்சியாளர்கள் சரியான முயற்சிகளை மேற்கொண்டு ஜி 20, ஐஎம்எப், எக்மண்ட் குழு போன்றவர்களிடம் இந்தப் பிரச்சினையை முன்வைத்து வலியுறுத்தல்களைத் தொடங்க வேண்டும். அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி இந்த வேலையை எப்போதோ ஆரம்பித்துவிட்டன.

இந்தியா ஆரம்பிக்குமா?

தகவல் உதவி: http://www.envazhi.com/?p=19245

ஞாயிறு, ஆகஸ்ட் 15, 2010

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்... மண் சார்ந்த விடுதலை கிடைத்த நமக்கு, சமூக விடுதலையும் பொருளாதார விடுதலையும் மனம் சார்ந்த [ஆன்மீக] விடுதலையும் இத்தருணத்தில் அவசியமாகிறது...

வெள்ளி, ஜூலை 16, 2010

GOD and a Child

The similarity between our GOD (known for his Love and Goodness) and a child (known for her/his innocence and cuteness)…

In my view, both

1.Will listen to us without thinking we are good or bad.
2.Will give everything to us and help us when we are asking.
3.Will easily forgive us and don’t remember our bad things again.
4.Will come with us to our home or anywhere if we invite with love.
5.Will speak true all the time; a child won’t speak true sometimes for our happiness like God will test us sometime for our goodness. Both are very true and trustful.
6.Will be very Happy but sometimes very Anger. Can’t predict when they will be.
7.Silent vs. Talkative… These characters will be seen based on circumstances.
8.Will Cry for the small things but Calm/happy for the big problems.
9.Will be very Innocents overall.
10.Are very clean and purity in hearts. Will be laughing always and happy whatever happens.
11.Will love us seamlessly without any expectations.
12.Will always seek for our attention (care) and expect us being as they wish.
13.Will be un-defined of their complete nature at last though they are Good, Joyful, Helpful, Clean, and True for all time for all of us for all the places…
Conclusion:

"If you become like a little child (in your hearts), you will enter into the kingdom of God or you will never enter it.", God says...

To Be a Child!

Matthew 18:2-4

Our Lord Jesus called a little child to come to him. Jesus stood the child before the followers. Then Jesus said, “I tell you the truth. You must change and become like little children {in your hearts}. If you don’t do this, you will never enter the kingdom of heaven. The greatest (most important) person in the kingdom of heaven is the person that makes himself humble like this child.”



Mark 10:14-15

Our Lord Jesus saw what happened. He did not like his followers telling the children not to come. Jesus said to them, “Let the little children come to me. Don’t stop them, because the kingdom of God belongs to people that are like these little children. I tell you the truth. You must accept the kingdom of God like a little child accepts things, or you will never enter it.”